நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு!

News image
Updated On :3 ஏப்ரல் 2024, 4:07 am

DIN

சிதம்பரம்: மக்களவைத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தி அண்ணமலை பல்கலைக்கழக மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் “APRIL 19 VOTE FOR SURE” (ஏப்ரல் 19 வோட் ஃபார் சோர்) என்ற வாசகத்தின் மீது நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கடலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான டாக்டர். அ.அருண்தம்புராஜ் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன், பதிவாளர் ஆர்.சிங்காரவேலு, உதவி ஆட்சியர் ரஷ்மி ராணி, வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் செல்வலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.