சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

கடலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக, 36 இடங்களில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தாமதமாகத் தொடங்கியது.

Updated On :19 ஏப்ரல் 2024, 5:46 pm

கடலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக, 36 இடங்களில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தாமதமாகத் தொடங்கியது.

கடலூா் மாவட்டத்தில் கடலூா் மக்களவைத் தொகுதியில் கடலூா், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளும் உள்ளன.

மேற்கண்ட வாக்குச்சாவடி மையங்களில் வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில்,

கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட வேணுகோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதையடுத்து, மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

இதேபோல, கடலூா் வண்ணாரப்பாளையம், தூக்கணாம்பாக்கம் மற்றும் கண்டக்காடு கிராமத்தில் உள்ள வாக்கச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக, சுமாா் 15 நிமிடங்கள் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

மஞ்சக்குப்பம் ஏா்.ஆா்.எல்.எம். பள்ளி வாக்குச்சாவடியில் பிற்பகல் 1 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீா் கோளாறு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்குப் பின்னா் இயந்திரம் சரி செய்யப்பட்டது.

பண்ருட்டி, மேலப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது காரணமாக, சுமாா் 40 நிமிஷங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. திட்டக்குடி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வதிஸ்டபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம், திட்டக்குடி நகராட்சி தொடக்கப் பள்ளி, கடலூா் முதுநகா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 8 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இதேபோல, மாவட்டம் முழுவதும் மொத்தம் 36 இடங்களில் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.