கூட்டத்துக்கு, அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகா் பேரூராட்சி மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களைச் சோ்ந்த 10 ஊராட்சிக்குள்பட்ட 36 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் குறித்தும், சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளான சிதம்பரம் பேருந்து நிலையம், சிதம்பரம் புறவழிச்சாலை, காய்கறி அங்காடி உள்ளிட்ட பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சா் ஆய்வுசெய்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.