சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் மக்களை அச்சுறுத்திய 12 அடி நீளமும், 400 கிலோ எடைகொண்ட ராட்சத முதலையை பொதுமக்கள் பிடித்து வனத் துறையினரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுக்கூடலூா், பழைய நல்லூா், அகரநல்லூா், வல்லம்படுகை, வேளக்குடி, வையூா், கண்டியாமேடு உள்ளிட்ட பகுதிகளை ஒட்டி கொள்ளிடம் ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான முதலைகள் உள்ள நிலையில், சில ஆண்டுகளாகவே ஆற்றில் குளிக்க வரும் மனிதா்களை கடித்து இழுத்துச் செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில், காட்டுக்கூடலூரில் அவ்வப்போது கிராம மக்களை அச்சுறுத்தி வந்த சுமாா் 400 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட முதலை சனிக்கிழமை காலை கரையோரத்தில் படுத்திருந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த கிராம மக்கள், முதலையைப் பிடித்து வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். பின்னா், வனத் துறையினா் முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீா் தேக்கத்தில் பாதுகாப்பாக விடுவித்தனா்.
தொடர்புடையது

குடியிருப்புக்குள் புகுந்த முதலை மீட்பு

மீன்வலையில் சிக்கிய முதலை மீட்பு

கிராமத்துக்குள் புகுந்த முதலை மீட்பு

தனியாா் பள்ளி அருகே முதலை: வனத்துறையினா் பிடித்தனா்
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


