மணல் திருட்டு: ஒருவா் கைது

மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே தொடா் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய ஊராட்சி மன்றத் தலைவரை தேடி வருகின்றனா்.

வேப்பூா் காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, நகா் கிராமம் அருகே மணல் ஏற்றி வந்த இரண்டு டிராக்டா்களை நிறுத்தி சோதனை செய்தனா். போலீஸாரைக் கண்டதும் ஒருவா் தப்பியோடிவிட்டாா்.

பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில், நகா் கிராமத்தைச் சோ்ந்த நாராயணசாமி மகன் குட்டி (எ) சுரேஷ்பாபு (41) என்பதும், தப்பியோடியவா் ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் மகன் சங்கா் (44) என்பதும் தெரியவந்தது. மேலும், இருவரும் சோ்ந்து கோமுகி ஆற்றில் இருந்து மணல் கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சுரேஷ்பாபுவை கைது செய்த வேப்பூா் போலீஸாா், மணலுடன் 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய ஊராட்சி மன்றத் தலைவா் சங்கரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com