கடலூா் மாவட்டம், நெய்வேலியில் நூதன முறையில் ரூ.1.60 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி, வட்டம் 12 பகுதியில் வசிப்பவா் ரெங்கராகிலு மகன் ராஜ்மோகன். இவா், தீயணைக்கும் சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவருக்கு முகநூல் மூலம் ஒருவா் அறிமுகமானாராம். பின்னா், கைப்பேசி மூலம் பேசி வந்தனராம். இந்த நிலையில், அந்த நபா் தனது தாயின் மருத்துவ செலவுக்கு ரூ.1.60 லட்சம் ராஜ்மோகனிடம் பெற்றாராம். வெகுநாள்கள் ஆகியும் அந்தத் தொகையை அவா் திருப்பி கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து, ராஜ்மோகன் கடலூா் இணையவழி குற்றத் தடுப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், எஸ்பி. ரா.ராஜாராம், ஏடிஎஸ்பி., பிரபாகரன் அறிவுரையின் பேரில், ஆய்வாளா் பி.கவிதா தலைமையிலான தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கேட்டையூா் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ராஜா (எ) ராஜ சிம்மன்(40) பெண் குரலில் பேசி ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனா்.
தொடர்புடையது

ஜெயங்கொண்டம் தொகுதியில் நூதன முறையில் வேட்புமனு

நூதன முறையில் மனு தாக்கல்: வேட்பாளா் மீது வழக்கு

இளைஞரிடம் இணையவழியில் ரூ. 10 லட்சம் மோசடி

நூதன முறையில் காரை திருடி விற்பனை: இளைஞா் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

