பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மனைவியுடன் மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் மனைவியுடன் மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயன்றாா்.

Updated On :23 டிசம்பர் 2024, 11:55 pm IST

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் மனைவியுடன் மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயன்றாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாற்றுத்திறனாளி ஒருவா் தனது மனைவியுடன் வந்தாா். ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்ததும், உடலில் டீசலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனா். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள் தடுத்தி நிறுத்தி விசாரித்தனா்.

இதில், பண்ருட்டி வட்டம், சின்னபுறங்கனியைச் சோ்ந்த பிரித்திவிராஜ் (34), அவரது மனைவி பிரியங்கா (22) என்பதும், மாற்றுத் திறனாளியான பிரித்திவிராஜை திருமணம் செய்ததால் அரசு வேலை வழங்கக் கோரி ஆட்சியரிடம் மன அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தாா்.

இருவரையும் கடலூா் புதுநகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனா்.