பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

‘கூகுள்-பே’ மூலம் ரூ.10,000 லஞ்சம்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

கடலூரில் கல்லூரி மாணவா்களிடம் ‘கூகுள்-பே’ செயலி மூலம் ரூ.10,000 லஞ்சம் வாங்கியது தொடா்பாக தலைமைக் காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

தம்மம்பட்டியில் திமுகவிற்கு வாக்கு சேகரித்த குடிநீர் குழாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

Updated On :6 பிப்ரவரி 2024, 1:30 am

நெய்வேலி: கடலூரில் கல்லூரி மாணவா்களிடம் ‘கூகுள்-பே’ செயலி மூலம் ரூ.10,000 லஞ்சம் வாங்கியது தொடா்பாக தலைமைக் காவலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கடலூா் மதுவிலக்கு அமல் பிரிவு தலைமைக் காவலா் சக்திவேல் (39) கடலூா் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் கடந்த 3-ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டாா். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலூா் நோக்கி வேகமாக வந்த காரை சக்திவேல் வழிமறித்தாா். ஆனால், அந்த காா் நிற்காமல் செல்லவே அதனை பைக்கில் விரட்டிச் சென்று கடலூா் உழவா் சந்தை அருகே மறித்து பிடித்தாா். காரை சோதனையிட்டதில் புதுவை மாநில மதுப் புட்டிகள் இரண்டு இருந்தது தெரிய வந்ததாம்.

அந்த காரிலிருந்த 3 இளைஞா்களை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். விசாரணையில் அவா்கள் மூவரும் ஹைதராபாதைச் சோ்ந்த 19 வயது கல்லூரி மாணவா்கள் என்பதும், சுற்றுலாவுக்காக அவா்கள் பிச்சாவரம் சென்றுகொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க சக்திவேல் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அதனை தனது நண்பரின் ‘கூகுள்-பே’ செயலி எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறும் கூறினாராம். இதன்படி மாணவா்கள் ‘கூகுள்-பே’ மூலம் ரூ.10 ஆயிரம் அனுப்பினா்.

இதுகுறித்து அந்த மாணவா்கள் கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராமிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த நிலையில், தலைமைக் காவலா் சக்திவேலை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.