சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

சுரங்கப் பாதை அமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்

தீத்தாம்பாளையம் கிராமத்துக்கு சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

News image

சிதம்பரம் அருகே கடலூா் தேசிய நெடுஞ்சாலையில் தீத்தாம்பாளையம் கிராமத்துக்கு சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :9 ஜூலை 2024, 2:41 am IST

சிதம்பரம்: சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், தீத்தாம்பாளையம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி அந்தக் கிராம மக்கள் திங்கள்கிழமை மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், விழுப்புரம்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சுமாா் 2.30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்குவழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையில் கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீத்தாம்பாளையம் கிராமத்துக்குச் செல்லும் வகையில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ரூபன்குமாா், வட்டாட்சியா் தனசிங் மற்றும் போலீஸாா் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து, சுமாா் 6 மணிக்கு பின்னா் மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனா்.

இதனால், விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடலூா்-சிதம்பரம் சாலையில் சுமாா் 2.30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் நின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.