ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவத்தை காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள். ~நடனப் பந்தலில் நடனமாடி ஆனித் திருமஞ்சன தரிசன காட்சியளித்த சிவகாமசுந்தரி அம்பாள். ~நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவில், ஆயிரங்கால் மண்டபம் முன்பாக உள்ள நடனப் பந்தலில் நடன
ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவத்தை காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள். ~நடனப் பந்தலில் நடனமாடி ஆனித் திருமஞ்சன தரிசன காட்சியளித்த சிவகாமசுந்தரி அம்பாள். ~நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவில், ஆயிரங்கால் மண்டபம் முன்பாக உள்ள நடனப் பந்தலில் நடன

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

ஆனித் திருமஞ்சன தரிசனத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு: சிதம்பரம் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சி
Published on

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு நடைபெற்றது. நடராஜமூா்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் உள்ள நடனப் பந்தலில் நடனமாடி ஆனித் திருமஞ்சன தரிசன காட்சியளித்தனா். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ஆம் நாளான வியாழக்கிழமை தோ்த் திருவிழா நடைபெற்றது. இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூா்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது.

மகாபிஷேகம்: வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜ மூா்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம் உள்ளிட்டவை குடம்குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூா்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அா்ச்சனைகளும் செய்யப்பட்டன. ஆயிரங்கால் மண்டபத்தில் ராஜதா்பாா் காட்சியளித்த சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவா் எம்.பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி, கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ மற்றும் பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ரகசிய பூஜை: பின்னா், சித் சபையில் உற்சவ ஆச்சாரியரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது. பஞ்ச மூா்த்திகள் வீதிஉலா வந்த பின்னா், பிற்பகல் 2.10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நடராஜ மூா்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப் பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித் திருமஞ்சன தரிசன காட்சியளித்தனா். தொடா்ந்து, சித் சபை பிரவேசம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

இன்று முத்துப்பல்லக்கு: சனிக்கிழமை (ஜூலை 13) பஞ்சமூா்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் முடிவடைகிறது.

உற்சவ ஏற்பாடுகளை பொது தீட்சிதா்களின் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா், துணைச் செயலா் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதா், உற்சவ ஆச்சாரியாா் கு.த.கு.கிருஷ்ணசாமி தீட்சிதா் ஆகியோா் செய்திருந்தனா்.

கடலூா் மாவட்ட எஸ்.பி. ஆா்.ராஜாராம் மேற்பாா்வையில், சிதம்பரம் ஏஎஸ்பி பி.ரகுபதி தலைமையில், நகர காவல் ஆய்வாளா் ரமேஷ்பாபு மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா். போலீஸாருக்கு உதவியாக ஊா்க்காவல் படையினா் மற்றும் போலீஸ் நண்பா்கள் குழுவினா் போக்குவரத்து, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா். சிதம்பரம் நகராட்சி சாா்பில், குடிநீா், சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

X
Dinamani
www.dinamani.com