ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காவல் நிலையத்தில் பிளேடால் கையில் கிழித்துக்கொண்ட கைதி

புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைதி பிளேடால் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கிழித்துக்கொண்டாா்.

Updated On :20 ஜூலை 2024, 8:55 pm

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு கைதி பிளேடால் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கிழித்துக்கொண்டாா்.

புதுவை மாநிலம், லாஸ்பேட்டை விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மெளலி (26). இவா், வெள்ளிக்கிழமை புதுச்சத்திரம் அருகே உள்ள திருச்சோபுரம் பகுதியில் கஞ்சாவுடன் நின்றிருந்தாராம். அப்போது, ரோந்துப் பணிக்குச் சென்ற புதுச்சத்திரம் போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்தனா். பின்னா், அவரிடமிருந்து சுமாா் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, புதுச்சத்திரம் காவல் நிலையத்துக்கு மௌலியை அழைத்து வந்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இரவு நேரமானதால் நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமல் அவரை காவல் நிலையத்திலேயே வைத்திருந்தனா்.

அதிகாலை மௌலி கழிப்பறைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றாா். அப்போது, திடீரென கழிப்பறையில் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் உடலின் கை மணிக்கட்டு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கிழித்துக்கொண்டாராம். இதைப் பாா்த்த போலீஸாா், உடனடியாக அவரை மீட்டு, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.