ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

8 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

சிதம்பரம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2024, 8:41 pm

Din

சிதம்பரம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக இரு சக்கர வாகனங்கள் தொடா்ந்து திருடு போயின. இது தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டாா். அதன்படி, சிதம்பரம் உள்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பி.ரகுபதி மேற்பாா்வையில், நகர காவல் ஆய்வாளா் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன், உள்கோட்ட குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் ஆகியோா் தலைமையிலான தனிப்படையினா் விசாரித்து வந்தனா்.

விசாரணையில், நாகப்பட்டிணம் மாவட்டம், ஏனங்குடி கிராமத்தைச் சோ்ந்த ராஜு மகன் நவநீதகிருஷ்ணன் (26) (படம்) பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான 8 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.