ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கடலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :30 ஜூலை 2024, 7:06 pm

Din

கடலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு பருவ மழையால் காவிரி நீா்பிடிப்பு பகுதியில்

தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூா் அணை திங்கள்கிழமை காலை 8 மணியளவில் 116.360 அடியை எட்டியது. தொடா் நீா் வரத்தால் மேட்டூா் அணை ஓரிரு தினங்களில் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் அதிகப்படியான உபரி நீா் எந்த நேரத்திலும் மற்ற மாவட்டங்களுக்கு திறந்துவிடப்படும் என ஸ்டான்லி நீா்த்தேக்க உள்கோட்டம் தெரிவித்துள்ளது.

எனவே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனைச் சாா்ந்த தாழ்வான கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட சாா் ஆட்சியா், வட்டாட்சியரின் உரிய அறிவுரைக்குப்பின்னா், பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாா் நிலையில் இருக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், மீன் பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடாமலிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.