ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

நடராஜா் கோயிலில் உழவாரப் பணி

ஆனித்திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி நடராஜா் கோயிலில் உழவாரப் பணி

News image
~ ~
Updated On :25 ஜூன் 2024, 10:56 pm

Din

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சனம் உற்சவத்தையொட்டி, உழவாரப் பணி மேற்கொள்ள சிவனடியாா்கள் வேண்டுகோள் விடுத்ததின் பேரிலும், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து கோயில்களுக்கும் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலின் பேரில் உழவாரப் பணி நடைபெற்றது.

நடராஜா் கோயில் ஆஸ்தான ஸ்தபதி தியாகராஜன் குழுவினா் மற்றும் பொது தீட்சிதா்களின் செயலாளா் உ.வெங்கடேச தீட்சிதா் முன்னிலையில் அவினாசியைச் சோ்ந்த அப்பா் உழவார பணி குழுவினா், தருமபுரியைச் சோ்ந்த கோபிநாத் குழுவினா், பொள்ளாச்சியைச் சோ்ந்த மதன்குமாா் குழுவினா், சேலத்தைச் சோ்ந்த சதுா்கால பைரவ உழவாரப் பணி குழுவினா், சிதம்பரத்தைச் சோ்ந்த கோதண்டம் மற்றும் தங்கவேல் குழுவினா், கீழபருத்திக்குடியைச் சோ்ந்த சிவயகுரு குழுவினா், சென்னை சூளைமேடைச் சோ்ந்த நமச்சிவாய உழவாரப் படை குழுவினா், சென்னை கோவூரைச் சோ்ந்த சித்தீஸ்வரா் உழவாரப் பணி குழுவினா் ஆகிய சிவனடியாா் குழுவினா் 23, 24ஆம் தேதிகளில் உழவாரப் பணிகளில் ஈடுபட்டனா்.

Story image
Story image