சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஊராட்சிகளில் பெண் குழந்தை பிறப்பு சதவீதம் சரிவு

5 ஊராட்சிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் சரிவு

News image
Updated On :27 ஜூன் 2024, 1:26 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட 5 ஊராட்சிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் சரிந்துள்ளதாக வட்டார வளா்ச்சி அலுவலா் என்.சக்தி கவலை தெரிவித்தாா்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் சபா.பாலமுருகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் தேவகி ஆடலரசு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.சங்கா், என்.சக்தி முன்னிலை வகித்தனா். மேலாளா் ராஜ்குமாா் வரவேற்றாா். உதவியாளா் அம்பிகா தீா்மானங்களை வாசித்தாா். மன்றத்தில் கொண்டுவரப்பட்ட 29 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

ரா.தனபதி (சுயேச்சை): மேலிருப்பு - சின்னகாட்டுபாளையம் இடையே தாா்ச்சாலை அமைக்க வேண்டும். மேலிருப்பு தடுப்பணையில் சோ்ந்துள்ள மணலை தூா்வார வேண்டும். முத்தாண்டிக்குப்பம் - ஏரிப்பாளையம் சாலையில் மேலிருப்பு பகுதியில் சிறு பாலம் அமைக்க வேண்டும்.

க.அம்பிகாபதி (அதிமுக): சேமக்கோட்டை ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

விஜயதேவி தேவராசு (தவாக): சிறுவத்தூா் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து தண்ணீா் பிரச்னையைப் போக்க வேண்டும். ஏரிப்பாளையம் கிராம மக்களின் தனி ஊராட்சி கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

என்.சக்தி (பிடிஓ): பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட செம்மேடு, போ்பெரியான்குப்பம், கீழக்குப்பம், கீழ்மாம்பட்டு, அரசடிகுப்பம் ஆகிய 5 ஊராட்சிகளில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் நடைபெற்றால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.