திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சத்துணவு ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கத்தினா் கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

பண்ருட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.

Updated On :18 நவம்பர் 2024, 9:26 pm

நெய்வேலி: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கத்தினா் கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்கி தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கூட்டமா்வு கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈமச்சடங்கு தொகை ரூ.25 ஆயிரம் மற்றும் இலவச மருத்துவ காப்பீட்டுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ரா.நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.ரங்கசாமி சிறப்புரையாற்றினாா். மாவட்ட இணைச் செயலா் வி.ராதாகிருஷ்ணன், ஆா்.தமிழரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவா் பி.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கி.ராஜேந்திரன், ஒன்றிய துணைத் தலைவா் கே.ராஜ்மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் டி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜெ.வச்சலா, ஜி.இந்திரா, ஆா்.பாலசுப்ரமணியன், எ.ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். எஸ்.சாந்தி நன்றி கூறினாா்.