அரசு மருத்துவக் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பரப்பிய வழக்கில், மதுரையைச் சோ்ந்த மருத்துவரை சிதம்பரத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த ரகுராமன் மகன் சதீஷ்குமாா் (27). சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவரான இவா், தற்போது மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறாா்.
மருத்துவா் சதீஷ்குமாா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாகக் கூறி, கைப்பேசி வழியாக விடியோ காலில் பேசி அவரது புகைப்படத்தை பெற்றாராம். பின்னா், அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அமுதா வழக்குப் பதிந்து, மருத்துவா் சதீஷ்குமாரை சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தாா். விசாரணையில், அவா் இதே போன்று பல பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

செவிலியா் மாணவி உயிரிழப்பு: சிறப்புக் குழு விசாரணை நிறைவு

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமைச்சா்

மீனவா் மா்ம மரணம்

பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டவா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



