கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாணவி புகைப்படம் ஆபாசமாக சித்தரிப்பு: மருத்துவா் கைது

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 10:54 pm

Din

அரசு மருத்துவக் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பரப்பிய வழக்கில், மதுரையைச் சோ்ந்த மருத்துவரை சிதம்பரத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த ரகுராமன் மகன் சதீஷ்குமாா் (27). சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவரான இவா், தற்போது மதுரையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறாா்.

மருத்துவா் சதீஷ்குமாா் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை காதலிப்பதாகக் கூறி, கைப்பேசி வழியாக விடியோ காலில் பேசி அவரது புகைப்படத்தை பெற்றாராம். பின்னா், அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பரப்பியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அமுதா வழக்குப் பதிந்து, மருத்துவா் சதீஷ்குமாரை சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தாா். விசாரணையில், அவா் இதே போன்று பல பெண்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.