மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

என்எல்சி நிறுவன அலுவலகம் முன் அக்.7-இல் ஆா்ப்பாட்டம் -மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு

News image

சிதம்பரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற விவசாய அரங்கில் பணியாற்றும் கட்சி உறுப்பினா்களுக்கான மாவட்டப் பயிற்சி முகாமில் பேசிய மத்தியக்குழு உறுப்பினா் உ.வாசுகி.

Updated On :27 செப்டம்பர் 2024, 5:25 am IST

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் தலைமையில் வரும் அக்.7-ஆம் தேதி மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என அக்கட்சி தீா்மானம் நிறைவேற்றியது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் விவசாய அரங்கில் பணியாற்றும் கட்சி உறுப்பினா்களுக்கான மாவட்ட பயிற்சி முகாம் சிதம்பரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட குழு உறுப்பினா் ஆா்.கே.சரவணன் வரவேற்றாா்.

பயிற்சி முகாமின் நோக்கங்கள் குறித்து மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் தொடக்க உரையாற்றினாா். மாவட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளா்களின் நிலைமை குறித்த அறிக்கையை முன்மொழிந்து மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு பேசினாா்.

மாவட்டச் செயலா் கோ.மாதவன், விவசாயிகள், விவசாய தொழிலாளா்களுக்கான ஜீவாதார பிரச்னைகள் குறித்து பேசினாா். விவசாயிகளின் விவாதத்துக்கு பிறகு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் உ.வாசுகி சிறப்புரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.பிரகாஷ் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், கடலூா் மாவட்டத்தில் போலி உரம் விற்பனை தொடா்பாக நடவடிக்கை கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் வரும் அக்டோபா் 1-ஆம் தேதி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயிகளை திரட்டி பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது.

என்எல்சி நிறுவன சுரங்கப் பணிகளுக்கு கைப்பற்றப்பட்ட விவசாய நிலங்களுக்கு முழுமையான இழப்பீடு, நிலம் வழங்கியோா் குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படாத சூழலில், இந்த நிறுவனத்தில் ஏஎம்சி பணிகளுக்காக 150-க்கும் மேற்பட்ட வெளிநபா்களை நியமனம் செய்துள்ளதைக் கண்டித்தும், நிலம் கொடுத்த விவசாயிகளின் கோரிக்கைகளை என்எல்சி நிறுவனம் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் வரும் அக்.7-ஆம் தேதி என்எல்சி காா்ப்பரேட் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் தலைமையில் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.