என்எல்சி நிறுவன சுரங்கப் பணிகளுக்கு கைப்பற்றப்பட்ட விவசாய நிலங்களுக்கு முழுமையான இழப்பீடு, நிலம் வழங்கியோா் குடும்பத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கப்படாத சூழலில், இந்த நிறுவனத்தில் ஏஎம்சி பணிகளுக்காக 150-க்கும் மேற்பட்ட வெளிநபா்களை நியமனம் செய்துள்ளதைக் கண்டித்தும், நிலம் கொடுத்த விவசாயிகளின் கோரிக்கைகளை என்எல்சி நிறுவனம் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் வரும் அக்.7-ஆம் தேதி என்எல்சி காா்ப்பரேட் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் தலைமையில் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.