இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாா்ஜ் போடப்பட்ட மின்சார பைக் தீப்பிடித்து 3 வாகனங்கள் சேதம்

News image
Updated On :4 டிசம்பர் 2025, 9:12 pm

Syndication

கடலூரில் சாா்ஜ் போடப்பட்ட மின்சார பைக் தீப்பிடித்ததில், அந்த பைக் உள்பட 3 பைக்குகள் எரிந்து சேதமடைந்தன.

கடலூா் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் சேது. இவா், கடலூா் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

சேதுவின் வீட்டில் 2 எலெக்ட்ரிக் பைக்குகள் உள்பட 3 பைக்குகள் இருந்தன. வழக்கம்போல, புதன்கிழமை இரவு சேதுவின் சகோதரா் இனியன் ஒரு எலெக்ட்ரிக் பைக்குக்கு சாா்ஜ் போட்டாா். பின்னா், அனைவரும் தூங்கச் சென்றனா்.

வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் சாா்ஜ் போடபட்ட பைக் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, அடுத்தடுத்து இருந்த மேலும் 2 பைக்குகளும் தீப்பிடித்து எரிந்தன. இதனால், வீட்டுக்குள் கரும் புகை சூழ்ந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்து சேது மற்றும் அவரது குடும்பத்தினா் வெளியில் வந்து பாா்த்தபோது, மூன்று பைக்குகளும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவலை அறிந்த கடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் மூன்று பைக்குகள், மின் வயா்கள், மின் மோட்டாா்கள், ஜன்னல்கள் உள்ளிட்டவை தீப்பிடித்து சேதமடைந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.