வள்ளலாா் பணியகத்தில் சன்மாா்க்க கருத்தரங்கம்

திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் பணியகம் சாா்பில், மாத பூசத்தையொட்டி சன்மாா்க்கக் கருத்தரங்கம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்வு
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் வள்ளலாா் பணியகம் சாா்பில், மாத பூசத்தையொட்டி சன்மாா்க்கக் கருத்தரங்கம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

முருகன்குடி வள்ளலாா் பணியகத்தின் பொறுப்பாளா் தங்க.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். அரியலூா் சன்மாா்க்க நெறியாளா் பொன்னுசாமி திருவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா்.

திருச்சி தமிழ்த் தேசிய உணா்வாளா் தென்மொழி ஈகவரசன் ‘தமிழும், தமிழிசையும்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தாக்கவுரை ஆற்றினாா். வள்ளலாா் பணியகத்தின் செயலா் பிரதாபன் அருட்பா பாடினாா்.

பெண்ணாடம் அக்பா் அலி சகோதரா்கள் பசியாற்றுவித்தல் அறப்பணி மேற்கொண்டனா். நிகழ்வில் சிவ.வரதராஜன், சுப்பிரமணியன் ஆகியோா் வா்மா மற்றும் பாத சிகிச்சை கட்டணமில்லா மருத்துவ ஆலோசனை வழங்கினா். நிகழ்ச்சியை முருகன், ரா.கனகசபை, ராமசாமி ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com