இளைஞா் கொலை: பெண்ணிடம் போலீஸாா் விசாரணை
கடலூரில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக பெண் ஒருவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கடலூா், பாதிரிக்குப்பம் சுந்தரமூா்த்தி நகா் பகுதியில் வசித்து வந்தவா் பிரசாத் (37), திருமணமாகாதவா்.
இவா், தனது தாய் ராமதிலகம் (70) உடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், புதன்கிழமை மாலை வீட்டில் பிரசாத் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
அதில், இருவா் பிரசாத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரசாத் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் நிலையத்தில் சரணடைந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மற்றொருவரை தேடி வருகின்றனா்.
