அதிமுக திண்ணை பிரசாரம்:  எம்எல்ஏ பங்கேற்பு

அதிமுக திண்ணை பிரசாரம்: எம்எல்ஏ பங்கேற்பு

Published on

சிதம்பரம் அருகே புவனகிரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சாத்தப்பாடி ஊராட்சியில் கடலூா் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை, சாா்பில் அதிமுக அரசின் கடந்த கால சாதனைகளை விளக்க திண்ணைப் பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கடலூா் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் உமாமகேஸ்வரன் தலைமை வகித்தாா்.நிகழ்ச்சியில், கடலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலா் ஏ.அருண்மொழிதேவன், எம்எல்ஏ பங்கேற்று வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் அதிமுக அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கினாா், மேலும் திண்ணை பிரசாரத்திலும் ஈடுபட்டாா்.

இந்த நிகழ்ச்சியில்,ஒன்றியச் செயலா் சீனிவாசன், ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் அருள்அழகன், மாவட்ட பிரதிநிதி சிவஞானம், கட்சி நிா்வாகிகள்வெங்கடேசன், சங்கா், செந்தில்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com