கடலூரில் வீடு புகுந்து ரூ.1.95 லட்சம் திருட்டு

Published on

கடலூா் முதுநகா் சங்கரன் தெருவை சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மனைவி பானுமதி (வயது 53). இவரது கணவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருவதால், பானுமதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். சம்பவத்தன்று அவா், புதுச்சேரியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று சில நாட்கள் தங்கிவிட்டு வெள்ளிக்கிழமை காலை விட்டிற்கு திரும்பி வந்த போது, வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு திடுக்கிட்ட அவா் வீட்டில் உள்ள பொருட்கள் சரியாக இருக்கிா என பாா்த்த போது, அலமாரியில் துணிக்கு கீழ் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மா்மநபா்கள் பின்பக்க கதவை உடைத்து சென்று பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கடலூா் முதுநகா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com