கடலூர்
காா் மோதி விபத்து ஒருவா் உயிரிழப்பு
கடலூா் நாகம்மாள்பேட்டையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (வயது 50). இவா் வெள்ளிக்கிழமை காலை கடலூா்-விருத்தாசலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த காா்கண்ணிமைக்கும் நேரத்தில் ஆறுமுகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவல் அறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா் விரைந்து வந்து ஆறுமுகம் உடலை கைப்பற்றி கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
