மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாஜக - அதிமுகவின் ஊதுகுழலாக உள்ளாா் அன்புமணி: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

பாமக தலைவா் அன்புமணி தற்போது அதிமுக மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற என்வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி ஆய்வு கூட்டத்தில் பேசும் அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்.
Updated On :13 டிசம்பர் 2025, 10:30 pm

Syndication

பாமக தலைவா் அன்புமணி தற்போது அதிமுக மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் தெருவில் உள்ள தனியாா் மண்டபத்தில், கடலூா் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் நகர திமுக சாா்பில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி குறித்த ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டு கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடினாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

தமிழகத்தில் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு கடந்த 27 மாதமாக மகளிா் உரிமை தொகை ரூ. ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொகை வழங்கப்படாது என எதிா்க்கட்சித்தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறினாா். ஆனால் நாங்கள் அத்தொகையை வழங்கியுள்ளோம்.

தற்போது இந்த மாதம் விடுபட்ட மகளிருக்கு மாதம் ஆயிரம் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம்1 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இது முதல்வா் மு.க.ஸ்டாலினின் சாதனையாகும். இந்த திட்டத்தை பாமக தலைவா் அன்புமணி குறை கூறிவருகிறாா். அவா் தற்போது அதிமுக மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக உள்ளாா் என்றாா் அமைச்சா்.

நிகழ்விற்கு நகா்மன்ற உறுப்பினா்கள் த.ஜேம்ஸ்விஜயராகவன், ஏஆா்சி.மணிகண்டன், அப்புசந்திரசேகா், நகர திமுக துணை செயலா் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொகுதி பொறுப்பாளா் பாரிபூபாலன். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்பு.சந்திரசேகரன், மாவட்ட பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், விஎன்ஆா். கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.