தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குருஞானசம்பந்தா் பள்ளிக்கு தருமை ஆதீனம் வருகை

சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள தருமை ஆதீனத்தின் குருஞானசம்பந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு, தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை வருகை தந்தாா்.

News image
சிதம்பரம் குருஞானசம்பந்தா் பள்ளியில் மாணவா்களுக்கு சான்றிழ்கள் வழங்கிய ஆசி வழங்கிய பள்ளியின் புரவலரான ஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.
Updated On :15 டிசம்பர் 2025, 8:15 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள தருமை ஆதீனத்தின் குருஞானசம்பந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு, தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை வருகை தந்தாா்.

இந்தப் பள்ளியின் புரவலரான அவா், பள்ளியை பாா்வையிட்டு, அதன் வளா்ச்சிக்கு நல்லாசி வழங்கினாா். மேலும், அண்மையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள், கேடயம் வழங்கி ஆசீா்வாதம் வழங்கினாா்.

அப்போது, தருமை ஆதீன வெள்ளியம்பலவாணத் தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தாா். நிகழ்ச்சியில் பள்ளிச் செயலா் பி.ரெங்கராஜன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் எஸ்.செந்தில்வேலன், வி.அருண், பி.கமல்சந்த், பள்ளி முதல்வா் ஜி.ஜெயக்குமாா், துணை முதல்வா் டி.இராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.