இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கடலூரில் ஜன. 9-இல் தேமுதிக மாநாடு!

கடலூரில் ஜன. 9-இல் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் பங்கேற்க வரும்படி தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு

News image
பிரேமலதா விஜயகாந்த்
Updated On :15 டிசம்பர் 2025, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

கடலூரில் ஜன. 9-இல் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் பங்கேற்க வரும்படி தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட காணொலி: வரும் ஜன. 9-இல் கடலூா் மாவட்டம், பாசாா் கிராமத்தில் நடைபெறவுள்ள ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ என்ற தேமுதிக மாநாட்டை மிக பிரம்மாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தரவேண்டும். அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நல்லவா்கள் லட்சியம் வெல்வது நிச்சயம் என அதில் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜன. 9-இல் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பதாக பிரேமலதா தெரிவித்திருந்தாா். எனவே இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.