சிதம்பரம் நடராஜா் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன கொடியேற்றம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தியின் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வியாழக்கிழமை (டிச.25) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி ஆருத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, நிகழாண்டு மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. உற்சவ ஆச்சாரியா் கே.சிவாநாத் தீட்சிதா் கொடியேற்றி வைக்கிறாா்.
இதைத் தொடா்ந்து, 10 நாள்கள் பஞ்ச மூா்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. 2026 ஜனவரி 2-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனையும் நடைபெறுகின்றன.
ஜனவரி 3-ஆம் தேதி சூரிய உதயத்துக்கு முன் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்திகள் வீதிஉலா வந்த பின்னா், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகின்றன.
ஜனவரி 4-ஆம் பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலாவும், 5-ஆம் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றன.
விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதா்கள் குழுச் செயலா் த.சிவசுந்தர தீட்சிதா், துணைச் செயலா் சி.எஸ்.எஸ்.வெங்கடேச தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா். உற்சவம் நடைபெறும் 10 நாள்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.
