சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அண்ணாமலைநகா் கிளை, தெற்கு பிச்சாவரம் கிளை மற்றும் கோவை ஆன்மிக நண்பா்கள் குழு சாா்பில் கீழரத வீதியில் சுமாா் 8 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, மாவட்டத் தலைவா் ஜகன்நாதன் ஆகியோா் அன்னதானத்தை தொடங்கி வைத்தனா். செயலா் சுவாமிநாதன், பொருளா் மனோகரன், ஷண்முகம் ஆகியோா் பங்கேற்றனா்.
நடராஜா் கோயில் தெற்கு கோபுர வாயிலில் தோ், தரிசன திருவிழாவில் அன்னம்பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் அறக்கட்டளை ராஜா தட்சிணாமூா்த்தி தீட்சிதா் தலைமையில் மூன்று வேளையும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விஸ்வகா்ம முன்னேற்ற சங்கம் சாா்பில் கம்மாளா் மடத்தில் அதன் மாநிலத் தலைவா் ஜி.சேகா் தலைமையில் சுமாா் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிா்வாகிகள் எஸ்.ரமேஷ், ஆா்.ராமச்சந்திரன், எஸ்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

15 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் நடராஜா் கோயில் சிவகங்கை தீா்த்தகுளம் தூா்வாரும் பணி தொடக்கம்

தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு

சங்கரன்கோவிலில் ஆடித்தவசு திருவிழா: ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம்

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசனம்! பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


