நேற்று(ஜூன் 16) மாலை கௌசல்யா வழக்கம்போல புலவனூர் சாலையில் நடை பயிற்சி செய்தபோது, அங்கே சாலை ஓரத்தில் அமர்ந்திருந்து மது குடித்துக்கொண்டிருந்த சில இளைஞர்கள் மூதாட்டியை வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து இழுத்துச் சென்று அருகேயுள்ள சவுக்கு தோப்பிற்குள் வைத்து மூதாட்டியை கடுமையாக தாக்கி, சத்தம் போட முடியாத வகையில் அவரது வாயில் மண்ணை கொட்டிவிட்டு மூதாட்டி அணிந்திருந்த உடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அத்துடன் மூதாட்டி காது, மூக்கில் அணிந்திருந்த நகைகளை அறுத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.