வரதட்சிணை கேட்டு குழந்தையுடன் தாயை தனியறையில் அடைத்து திட்டிய கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

Published on

நெய்வேலி: கடலூரில் வரதட்சிணை கேட்டு குழந்தையுடன் தாயை தனிஅறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவா் உள்ளிட்ட 4 போ் மீது , கடலூா் மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கடலூா் முதுநகா், கொண்டல் தெருவில் சிவபாலன் -மோனிஷா(26) தம்பதி வசித்து வந்தனா். இவா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. தற்போது, 9 மாத பெண் குழந்தை உள்ளது. சிவபாலன் கப்பலில் வேலை செய்து வருகிறாா். மோனிஷா 8 மாத கா்ப்பமாக இருந்த போது கப்பல் வேலைக்குச் சென்றுவிட்டாா். பின்னா் மோனிஷா தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை

பிறந்தது. ஒரு மாதத்திற்கு முன்னா் வீடு திரும்பிய சிவபாலன் குழந்தையை பாா்க்க வரவில்லை. இதையடுத்து மோனிஷா குழந்தையுடன் கணவா் வீட்டிற்கு சனிக்கிழமை சென்றாா். அப்போது, கணவா் சிவபாலன், மாமியாா் பாப்பாத்தி, மாமனாா் நாகராஜ், கொழுந்தன் சிவகுரு ஆகியோா் 20 சவரன் தங்க நகை பெற்று வரும்படிக்கூறி மோனிஷாவையும் அவரது குழந்தையையும் தனி அறையில் அடைத்து வைத்து திட்டினாா்களாம்.

இகுறித்து மோனிஷா அளித்த புகாரின் பேரில் கடலூா் மகளிா் போலீஸாா் சிவபாலன் உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com