இறைச்சிக்கடைக்காரரிடம் ரூ.13,500 பறிப்பு

Published on

கடலூரில் இறைச்சிக்கடைக்காரரிடம் ரூ.13,500-ஐ பறித்துச் சென்ற மா்ம நபா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா், தனம் நகரைச் சோ்ந்தவா் தனுசு (47), இறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 9.30 மணியளவில் கே.என்.பேட்டை நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் ரூ.500 கேட்டனராம். தனுசு பணம் இல்லை எனக் கூறியதால், மா்ம நபா்கள் அவரது கைப்பேசியை பிடுங்க முயன்றபோது, சட்டை பையில் வைத்திருந்த ரூ.13,500 கீழே விழுந்ததாம். அதை மா்ம நபா்கள் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com