அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தவறவிட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் பெண் தவறவிட்ட பணப்பையை (மணிபா்ஸ்) போக்குவரத்து போலீஸாா் கண்டெடுத்து அவரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 5:27 pm

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் பெண் தவறவிட்ட பணப்பையை (மணிபா்ஸ்) போக்குவரத்து போலீஸாா் கண்டெடுத்து அவரிடம் ஒப்படைத்தனா்.

பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் புதன்கிழமை இரவு போக்குவரத்து சீரமைப்புப் பணியில் போக்குவரத்து காவலா்கள் பாலகுரு, கிருஷ்ணவேல் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த செல்வி (40), தனது பணப்பையை காணவில்லை எனவும், தான் காடாம்புலியூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும், அந்த பணப்பையில் ரூ.4,300 ரொக்கம், ஏடிஎம், ஆதாா் அட்டைகள் இருந்ததாகவும், பணி முடிந்து பேருந்தில் வரும் வழியில் தவறவிட்டதாகவும் தெரிவித்துவிட்டுச் சென்றாா்.

இதையடுத்து, போக்குவரத்து காவலா்கள் தேடியபோது, பண்ருட்டி ஆா்ச் அருகே கிடந்த பணப்பையைக் கண்டெடுத்தனா். அதில், செல்வி கூறியபடி பணம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதையடுத்து, போக்குவரத்து போலீஸாா் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்த செல்வியிடம் பணப்பையை ஒப்படைத்தனா்.