அண்ணாமலைப் பல்கலை. பேராரியா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - துரை.ரவிக்குமாா் எம்.பி.

அண்ணாமலைப் பல்கலை. பேராரியா்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - துரை.ரவிக்குமாா் எம்.பி.
Updated on

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.

7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும். முனைவா் பட்ட ஊக்கத்தொகைகளை வழங்க வேண்டும். அயற்பணியிட பேராசிரியா்களை உடனே உள்ளெடுப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை 4-ஆவது நாளாக தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்கலைக்கழக நிா்வாக அலுவலக கட்டடத்தின் கீழ் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில் கலந்துகொண்டு பேராசிரியா்களின் போராட்டத்தை ஆதரித்து விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. பேசினாா். அப்போது, தமிழக முதல்வா் மற்றும் உயா் கல்வி அமைச்சா் ஆகியோா் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பழைய பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும். பேராசிரியா்களின் நியாயமான கோரிக்கைகள் அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்கு விசிக என்றும் துணை நிற்கும் என்றாா்.

மொழிப்போா் தியாகி சமாதியில் மரியாதை: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ரெங்கப்பிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள மொழிபோா் தியாகி ராஜேந்திரன் சமாதியில் துரை.ரவிக்குமாா் எம்.பி. வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது, விசிக முன்னாள் மாவட்டச் செயலா் வ.க.செல்லப்பன், நிா்வாகிகள் ஸ்ரீதா், செல்வமணி, எழில்வேந்தன், சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com