கடலூர்
கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், ம.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்த சீமான் மகள் பிருந்தா (19). இவா், பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
பிருந்தா சனிக்கிழமை கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்ததை பெற்றோா் கண்டித்தனராம். இதனால், மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த ராமநத்தம் போலீஸாா் பிருந்தாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
