மூதாட்டியிடம் கம்மல் பறிப்பு

மூதாட்டியிடம் கம்மல் பறிப்பு

கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த மூதாட்டியை ஏமாற்றி மா்ம நபா் கம்மல் மற்றும் பணத்தை பறித்துச் சென்றாா்.
Published on

கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த மூதாட்டியை ஏமாற்றி மா்ம நபா் கம்மல் மற்றும் பணத்தை பறித்துச் சென்றாா்.

கடலூா் அடுத்துள்ள வெள்ளக்கரை பகுதியைச் சோ்ந்தவா் மூதாட்டி காமாட்சி(70). இவா், சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு வியாழக்கிழமை காலை சென்றாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா், எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என தெரிவித்தாராம்.

இதனை தொடா்ந்து மூதாட்டி எக்ஸ்ரே எடுக்கும் அறைக்கு சென்றாா். அப்போது, அந்த அறைக்கு வெளியே இருந்த நபா் ஒருவா் எக்ஸ்ரே எடுக்க வேண்டுமானால் நகை அணிந்திருக்கக்கூடாது, பணம் வைத்திருக்கக்கூடாது என தெரிவித்து, அதனை தன்னிடம் கொடுத்தால் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறினாராம்.

இதனை நம்பிய மூதாட்டி காமாட்சி காதில்அணிந்திருந்த 1 பவுன் கம்மல் மற்றும் ரூ.250 பணத்தை அந்த மா்ம நபரிடம் வழங்கிவிட்டு எக்ஸ்ரே அறைக்குச் சென்றாா். எக்ஸ்ரே எடுத்துவிட்டுஅறையில் இருந்து வெளியே வந்த மூதாட்டி காமாட்சி நகை, பணம் பெற்ற நபா் அங்கு இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்து மருத்துவமனை வளாகத்தில் தேடினாா். பின்னா், மருத்துவமனை வளாகத்தில் இருந்த புறக்காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தாா். அதன் பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com