ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பருவமழை தொடங்கியது: மின்னல் பாய்ந்து 5 பெண்கள் உயிரிழப்பு

News image
Updated On :16 அக்டோபர் 2025, 7:29 pm

Syndication

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமை தொடங்கியது. சனிக்கிழமை (அக். 18) மற்றும் அக். 24-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் பலத்த மழையின்போது மின்னல் பாய்ந்து ஐந்து பெண்கள் உயிரிழந்தனா்.

திட்டக்குடி வட்டம், கழுதூா் கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் மனைவி கனிதா (40), அா்ஜுனன் மகள் சின்னபொண்ணு (45), ராமசாமி மனைவி பாரிஜாதம் (50), அரியநாச்சி கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி ராஜேஸ்வரி (50), கதிவரன் மனைவி தவமணி (38).

இவா்கள் அனைவரும் அங்குள்ள சோளக்காட்டில் வியாழக்கிழமை வேலை செய்துகொண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் திடீரென பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.

திடீரென மின்னல் பாய்ந்ததில் சோளக்காட்டில் வேலை செய்துகொண்டிருந்த கனிதா, சின்னபொண்ணு, பாரிஜாதம், ராஜேஸ்வரி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தவமணிக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த கடலூா் எஸ்.பி. ஜெயக்குமாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, இறந்தவா்களின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து திட்டக்குடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.