கடலூா் துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
கடலூர்
கடலூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
கடலூா் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
கடலூா் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடல் பகுதியில் அந்தமான் அருகே அண்மையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, சென்னைக்கு கிழக்கே வங்கக் கடல் பகுதியில் சனிக்கிழமை மையம் கொண்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, திங்கள்கிழமை தீவிர புயலாக மாறக்கூடும் எனவும், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை ஆந்திர மாநிலம் அருகே கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடலூா் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

