பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கடலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

News image

குறிஞ்சி நகரில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளருக்கு வரவேற்பளித்த மாா்க்சிஸ்ட் கட்சி நகா்குழு உறுப்பினா் தேவநாதன் உள்ளிட்டோா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:56 am IST

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

கடலூா் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட குறிஞ்சி நகா், கோண்டூா், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, மருதாடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் காலை முதலே கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது, சட்டப் பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன், திமுக தோ்தல் பணிக்குழுச் செயலா் இள.புகழேந்தி, ஒன்றியச் செயலா் விஜயசுந்தரம், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், விசிக மாவட்டச் செயலா் கலை மோகன், துணை மேயா் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலா் உடனிந்தனா்.

முன்னதாக, குறிஞ்சி நகரில் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு, மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் நகா்குழு உறுப்பினா் தேவநாதன் தலைமையில் கிரீடம் அணிவித்தும், சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.