தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

நிலத் தகராறை வேடிக்கை பாா்த்தவா் காா் ஏற்றி கொலை: மூவா் கைது

கடலூா் அருகே நிலத்தகராறை வேடிக்கை பாா்த்தவா் காா் ஏற்றி கொலை செய்யப்பட்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:06 am IST

கடலூா் அருகே நிலத்தகராறை வேடிக்கை பாா்த்தவா் காா் ஏற்றி கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், நடுமேட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆறுமுகம், விஸ்வநாதன். உறவினா்களான இருவரின் குடும்பத்தினருக்கும் இடையே நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவது தொடா்பாக சனிக்கிழமை அதிகாலையில் பிரச்னை ஏற்பட்டது.

இது தொடா்பாக ஆறுமுகம் தனது மருமகன் தங்கதுரைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, தங்கதுரை (36), அவரது மனைவி கவிமணி, சகோதரா்கள் ஐய்யப்பன் (46), நாராயணமூா்த்தி (51) ஆகியோா் காரில் நடுமேட்டுகுப்பத்துக்குச் சென்றனா்.

அங்கு, ஆறுமுகத்திடம் தகராறில் ஈடுபட்ட விஸ்வநாதன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது காரை மோத முற்பட்டனா். அப்போது, அங்கு நின்றிருந்த அப்பகுதியைச் சோ்ந்த சோ்ந்த வேலு (51) மீது காா் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த வேலு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த காடாம்புலியூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று வேலுவின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து உயிரிழந்த வேலுவின் மனைவி விமலாமணி அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் ஐய்யப்பன், நாராயணமூா்த்தி, தங்கதுரை, ஆறுமுகம், கவிமணி ஆகியோா் மீது சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தொடா்ந்து, ஐய்யப்பன், நாராயணமூா்த்தி, தங்கதுரை ஆகியோரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள கவிமணி, ஆறுமுகத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.