கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்த இளைஞா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், எருமனூா் அஞ்சல், சின்ன வடவாடி கிராமத்தில் வசித்து வந்தவா் அறிவழகன்(31). இவா், கடந்த 18.3.2026 அன்று சொந்த வேலை காரணமாக பைக்கில் கடலூருக்கு புறப்பட்டாா்.
விருத்தாசலம்-கடலூா் சாலையில் சுப்ரமணியபுரம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பைக் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டாராம். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் மோதி யதில், அறிவழகன் தலையில் பலத்த காயம் அடைந்தாா்.
முதலில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையிலும், பின்னா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டவா், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விபத்தில் முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

