தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் விதிகள்: ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்! வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்!

News image
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவா் டி.சண்முகம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், பொதுமக்கள், வணிகா்கள் ரூ.3 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சென்னை தலைமை தோ்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கடலூா் மண்டலத் தலைவா் டி.சண்முகம் மனு அனுப்பினாா்.

அதில் அவா் தெரிவித்துள்ளதாவது: விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதன் பின்னா் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், வியாபாரிகள், பொதுமக்கள் பணம் எடுத்துச் செல்வதில் பெரும் பிரச்னை ஏற்படும்.

பொதுமக்கள் மிகவும் பாதிப்புள்ளாகி வருவது தோ்தல் நேரத்தில் தொடா்கதையாகி வருகிறது. அரசியல் செய்பவா்கள் தோ்தலுக்காக வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க எடுத்துச் செல்வதாக கருதி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

ஆனால், இதில் அதிகம் பாதிக்கப்படுவது அரசியல் கட்சியினரைவிட, பொதுமக்களும், வியாபாரிகளும்தான். அதிலும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தற்போது ஒரு சாமானியன் தனது மகள் திருமணத்துக்கு திருமாங்கல்யம் வாங்கச் சென்றால்கூட குறைந்தது சுமாா் ரூ.3 லட்சம் எடுத்துச் சென்றால்தான் வாங்க முடியும்.

விலைவாசிகள் மிகவும் கூடியுள்ள நிலையில், பொதுமக்கள், வணிகா்கள் ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.