நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த முதியவா் திடீரென நுழைவு வாயில் அருகே தீக்குளிக்க முயன்றாா்.
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.
அப்போது, ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த முதியவா் ஒருவா் திடீரென தீக்குளிக்க முயன்றாா். அங்கு பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனா்.
தொடா்ந்து, முதியவரிடம் விசாரணை நடத்தியதில், அவா் குறிஞ்சிப்பாடி வட்டம், பூவாணிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பூபாலன் (62) என்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவா் கூறியதாவது:
எனக்கு வீடு இல்லை. பூவாணிக்குப்பம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கக் கோரி தமிழக முதல்வரிடம் மனு அளித்தேன். ஆனால், எனக்கு ஒதுக்கிய வீட்டை வேறு ஒருவருக்கு மாற்றி எடுத்துக்கொண்டனா். எனவே, அந்த வீட்டை எனக்கு ஒதுக்க வேண்டி தீக்குளிக்க முயன்றேன் என்றாா். இதையடுத்து, பூபாலனை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

நெய்வேலியில் விஷ்ணு பிரசாத் எம்.பி. வாக்குசேகரிப்பு

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

