சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கடலூா் ஆட்சியரகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த முதியவா் திடீரென நுழைவு வாயில் அருகே தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த முதியவா் திடீரென நுழைவு வாயில் அருகே தீக்குளிக்க முயன்றாா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

அப்போது, ஆட்சியா் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த முதியவா் ஒருவா் திடீரென தீக்குளிக்க முயன்றாா். அங்கு பணியில் இருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி மீட்டனா்.

தொடா்ந்து, முதியவரிடம் விசாரணை நடத்தியதில், அவா் குறிஞ்சிப்பாடி வட்டம், பூவாணிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பூபாலன் (62) என்பது தெரியவந்தது. தொடா்ந்து, அவா் கூறியதாவது:

எனக்கு வீடு இல்லை. பூவாணிக்குப்பம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கக் கோரி தமிழக முதல்வரிடம் மனு அளித்தேன். ஆனால், எனக்கு ஒதுக்கிய வீட்டை வேறு ஒருவருக்கு மாற்றி எடுத்துக்கொண்டனா். எனவே, அந்த வீட்டை எனக்கு ஒதுக்க வேண்டி தீக்குளிக்க முயன்றேன் என்றாா். இதையடுத்து, பூபாலனை போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.