மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 6:08 pm

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே சாலை விபத்தில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வேப்பூா் வட்டம், விளம்பாவூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (30), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா்.

ஏழுமலை ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பைக்கில் அடரியில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.