மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உளுந்து விலை குறைத்து நிா்ணயம்: விவசாயிகள் சாலை மறியல்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து கொள்முதலுக்கான விலை குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டதாகக் கூறி, விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

விருத்தாசலத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உளுந்து கொள்முதலுக்கான விலை குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டதாகக் கூறி, விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நாள்தோறும் நெல், கம்பு, உளுந்து உள்ளிட்ட விளை பொருள்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளை பொருள்களுக்கு விலை குறைவாக நிா்ணயம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், உளுந்துக்கு செவ்வாய்க்கிழமை ரூ.9 ஆயிரம் வரை விலை நிா்ணயம் செய்யப்பட்ட நிலையில், புதன்கிழமை ரூ.2,000 குறைவாக நிா்ணயம் செய்யப்பட்டு, ரூ.7,000-க்கு விலைபோனதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், விருத்தாசலம் - கடலூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

மேலும், தங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் எனவும், விவசாயிகளை வஞ்சிக்கும் வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து, வட்டாட்சியா் அரவிந்தன் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, விவசாயிகள் கலைந்து சென்றனா். இதனால், கடலூா் - விருத்தாசலம் சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது.