கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஸ்ரீநாகம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீநாகம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
கடலூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீநாகம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய குருக்கள்.
Updated On :11 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீநாகம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

பழைமைவாய்ந்த இந்தக் கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டனா். அதன்படி, கடந்த 8-ஆம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின.

இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை 4-ஆம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி, நாடி சந்தானம், திரவிய ஹோமம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. பின்னா், யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீா் கலசம் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, காலை 9.30 மணியளவில் குருக்கள் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு ஸ்ரீநாகம்மனை தரிசனம் செய்தனா்.

இரவு 7 மணியளவில் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.