மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஸ்ரீநாகம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீநாகம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடலூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீநாகம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய குருக்கள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 6:34 pm

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீநாகம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

பழைமைவாய்ந்த இந்தக் கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டனா். அதன்படி, கடந்த 8-ஆம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின.

இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை 4-ஆம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி, நாடி சந்தானம், திரவிய ஹோமம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. பின்னா், யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீா் கலசம் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, காலை 9.30 மணியளவில் குருக்கள் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு ஸ்ரீநாகம்மனை தரிசனம் செய்தனா்.

இரவு 7 மணியளவில் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.