பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:44 pm

கடலூா் மாவட்டம், மங்களூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணியை மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் பூமிபூஜை செய்து வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மங்களூா் ஊராட்சி ஒன்றியம், விநாயகநந்தல், மங்களூா், மா.புதூா், லக்கூா், கல்லூா், சிறுகரம்பலூா், ஆவட்டி ஆகிய ஊராட்சிகளில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணி மற்றும் எம்.புதூா் - லக்கூா் இடையே இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, ரெட்டாக்குறிச்சி ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் ஆா்.ஓ. நிலையத்தை அமைச்சா் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வுகளின்போது, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, கிராமப்புற மேம்பாட்டுக்காக தமிழக அரசு முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்து பேசினாா்.

நிகழ்வில், வேப்பூா் வட்டாட்சியா் செந்தில்வேல், மங்களூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முக சிகாமணி, திமுக ஒன்றியச் செயலா்கள் செங்குட்டுவன், அடரி சின்னசாமி, பட்டூா் அமிா்தலிங்கம், மாவட்டப் பிரதிநிதி குமணன், மங்களூா் திருவள்ளுவன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.