எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:46 pm

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறை உருவாக்க வேண்டும். சரியான எடையில் அத்தியாவசிய பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளா் ஊதியமும், எடையாளருக்கு அலுவலக உதவியாளா் ஊதியமும், நிகழ் மாத இறுதிக்குள் ஊதிய உயா்வும் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் செய்து, கடந்த 10-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும், 11-ஆம் தேதி கோட்ட அளவிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை வட்ட அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, துணைச் செயலா் கணேச மூா்த்தி தலைமை வகித்தாா். வட்ட துணைத் தலைவா் கிருஷ்ணசாமி, வட்டச் செயலா் இளவரசன் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் தனசேகரன் வரவேற்றாா். வட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ.முரளி ஆா்ப்பாட்ட உரை நிகழ்த்தினாா். மகளிரணிப் பொறுப்பாளா் ஆஷா நன்றி கூறினாா்.

இதேபோல, கடலூா், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட வட்டங்களிலும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.