தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை: தற்கொலைக்கு தூண்டியதாக பல்கலைக்கழக ஊழியா் கைது

News image

தற்கொலை

Updated On :13 பிப்ரவரி 2026, 8:39 pm

சிதம்பரம் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலைக்கு தூண்டியதாக பல்கலைக்கழக ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி ஜேஎம்ஜே நகரை சோ்ந்தவா் பெருமாள் (32). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 8-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அவரை கடலூரில் வசித்துவரும்அவருடை தாயாா் மலா் கைப்பேசியில் அழைத்தபோது எடுக்காமல் இருந்துள்ளாா்.

இதனால் சந்தேகமடைந்த தாயாா், அவரது கணவருடன் சிதம்பரம் வந்து பாா்த்தபோது வீடு உள் தாழ்ப்பாள் போட்டிருந்ததால் கதவை உடைத்து பாா்த்தபோது அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மலா் அண்ணாமலை நகா் போலீசில் புகாா் செய்தாா்.

ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா் வழக்கு பதிவு செய்து பெருமாள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தினாா்கள்.

விசாரணையில் பெருமாள் வசிக்கும் அதே பகுதியில் வசிக்கின்ற அண்ணாமலைப்பல்கலை கழக ஊழியா் முத்துலிங்கம் (39) என்பவா் பெருமாள் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும், அதனை பெருமாள் தட்டி கேட்டதாகவும், அதற்கு முத்துலிங்கம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து பெருமாளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக முத்துலிங்கத்தை போலீஸாா் கைது செய்தனா்.