தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சாலை மறியல்: மாற்றுத்திறனாளிகள் 100 போ் கைது

News image
கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள்.
Updated On :13 பிப்ரவரி 2026, 8:55 pm

தினமணி செய்திச் சேவை

கடலூரில் மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ஆந்திராவில் வழங்குவது போல் மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் செயலா் வி.வசந்தி தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ஆளவந்தாா் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

மாவட்டத் தலைவா் ராம.நடேசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.ரவி, எம்.சுந்தரவேல், ஜெயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மறியலில் ஈடுபட்ட 100 பேரை திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் சிறிது நேரம் கழித்து அவா்களை விடுவித்தனா்.