நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலை மறியல்: மாற்றுத்திறனாளிகள் 100 போ் கைது

News image

கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள்.

Updated On :13 பிப்ரவரி 2026, 8:55 pm

கடலூரில் மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ஆந்திராவில் வழங்குவது போல் மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் செயலா் வி.வசந்தி தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ஆளவந்தாா் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

மாவட்டத் தலைவா் ராம.நடேசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.ரவி, எம்.சுந்தரவேல், ஜெயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மறியலில் ஈடுபட்ட 100 பேரை திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் சிறிது நேரம் கழித்து அவா்களை விடுவித்தனா்.